Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

சே

che

 

 

சமீப காலமாய் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது
சே ரசிகர்களை அது சிந்திக்க வைத்துள்ளது.சே வின் பெயர் பிரபலம் அடைய காரணம் மாது சேங் பெயரை மக்கள் மறப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற செய்தி. உண்மையில் அதுவல்ல காரணம். அமெரிக்காவை எதிர்தவனுக்கு அமெரிக்காவில் தான் ரசிகர்கள் அதிகம். சே ஒரு நிறைந்த மனிதன்.ஒருவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவன். அவன் நினைத்து இருந்தால் கியூபா விலே நிம்மதியாய் வாழ்ந்து இருக்கலாம்.ஆனால் அவன் அதை செய்யவில்லை.பொலிவிய காடுகளில் அவன் சுற்றி திரிய காரணம் என்ன? “என் கால்கள் செல்லும் இடம் எல்லாம் என் உலகம்” என்று கூறியவன் . பூங்குன்றனார் போல் யாதும் ஊரே தத்துவம் தான் அது. இன்று அவனை போற்றுபவர்கள் அனைவரும் அவன் சரித்திரத்தை சிறிதேனும் அறிந்தவர்கள்.வாழ்கையை முழுதாய் வாழ்ந்த சிலரில் அவனும் ஒருவன்.அவனை பற்றி படித்தவர்கள் வியந்தது ஒன்று தான் அது அவன் ஆளுமை.முப்பத்தி ஒன்பது வயதில் வாழ்வை முழுதாய் வாழ்ந்து முடித்தான்.அவனிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வாழ்க சே

விருட்சம்

ஒரு விதையை உற்று நோக்கினால் அது துளிர்த்து செடியாகிவிடுமா ??
ஆகாது ……….ஆனால்
உன்னை உற்று நோக்கி பார் , நீ விருட்சமாவாய்..

எரி நட்சத்திரம்

விண்மீன்கள் எல்லாம் விட்டில் பூச்சிகள் ஆயின
உன்னை நிலவு என்று எண்ணி பூமிக்கு வர எத்தனித்ததால்……

என் கல்லறை மீது மலர்களை தூவாதீர்கள்
சில தானியங்களை தூவுங்கள்
அதை உண்ண வரும் பறவைகளின்
ஒலிகளிலாவது என் தனிமையை கொள்ள முயல்கிறேன்
————— ஒரு ரஷ்ய கவிஞன்

மயிலிறகு குட்டி போடும்

குழந்தைகளுக்கு மானிட்டர் வேண்டாம்
மயிலிறகு குட்டி போடும் என்று சொல்லுங்கள்
பால்யத்தை தொலைத்த எவரும் இளமையில்
பிரகாசிக்க முடியாது

எதை தேடுகிறோம்

பிண்டம் அண்டத்தை நோக்கும்
மின்சாரம் இல்லா இரவு …
வெறுமையாய் தோன்றினாலும் நிறைந்து இருக்கும் மனது..
மென்சோகம் கொண்டது போல் கலைந்தோடும் மேகம் ,
அரிதாய் கிடைத்தாலும் அர்த்தமுள்ள கணம் என்னை உற்று நோக்கும் மனம்
எங்கும் பதில்கள் இருக்கின்றன கேள்விகள் தான் கிடைக்கவில்லை ….


 

 

 

 

 

 

 

 

 

எங்கோ படித்த வாசகம்………………………….

எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை

மழை நேர இரவும் தேனிர் கோப்பையும்

வாழ்க்கை பல நேரம் அலுத்து விடுகிறது

சென்னை தியாகராயர் நகரில் சிக்னலில் இன்று

மாப்ளே அங்க பாரு
செம பிகர்
அட போடா
இப்பல்லாம் பொண்ணுங்கள பார்த்தாலே பயமா இருக்கு
ஏன்டா ?
நம்ம கலாச்சாரத்துல இவங்கள ஜீன்ஸ் போடவிட்ட அப்பா அம்மாவ நெனச்ச தான் கவலையா இருக்கு !!!!!!!!!
என்ன சொல்ற?
முன்னாடி போற வண்டியில பின்னாடி உட்கார்ந்து இருக்கற யுவதி கிட்ட எப்படி சொல்றது “தெய்வமே இன்னிக்கு நான் உன்ன கவனிக்காம ரோட கவனிச்சு ஓட்டனும வண்டிய என்று ………..
******************************************************************
இலை கொண்டு உடை செய்தான் அன்று
இலை அளவே உடுத்துகிறாள் இன்று

 

 

 

 

 
 

 

 

தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை
தவறொன்றும் இல்லை

***************************

பூப்போட்ட தாவணி அழகென்றேன்.
முந்தானையால் கண் கட்டிவிட்டாய்,
சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன்.
நம்பாவிட்டாலும் பரவாயில்லை
கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே!
***************************
தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.
***************************
அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்.
***************************
‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.
***************************

source ottraiandril.com

குட்டி சாத்தான் போலே வரும் எண்ணங்கள்

 

 

 

பாம்பாட்டிச் சித்தன் கவிதைகள்

நீரில் மிதந்த நிலவை

இரவெல்லாம் துவளாதுகரையேற்றிய அலைகளுக்கு

பரிதியை பரிசாய் தந்தது

விடியல்*

பேருந்துப் பயணத்தில்

சாளரக்கண்ணாடிஇடையிலிருந்தும்

எதிர்வரும் முட்செடிக்கு

முகத்தை விலக்கும்

பழகிய மூளை

Follow

Get every new post delivered to your Inbox.